×

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம், இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

மதுரை: பத்திரப்பதிவு அலுவலகங்களில் மறைமுக கட்டணம் வசூல் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். மதுரை ஊத்தங்குடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

பத்திர எழுத்தாளர்கள், பதிவாளர்கள் இடையே இடைத்தரகர்கள் இருக்க கூடாது. பதிவு கட்டணம் மற்றும் எழுத்து கட்டணம் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் துறைரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.



Tags : Minister ,Moorthy , registration
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...