×

செங்கல்பட்டு மாவட்ட புதிய எஸ்பி விஜயகுமார் நாளை பொறுப்பேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி-யாக விஜயகுமார் நேற்றிரவு நியமிக்கப்பட்டார். அவர் நாளை செங்கல்பட்டு எஸ்பியாக பொறுப்பேற்கிறார். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி-யாக சுந்தரவதனம் கடந்த 80 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியான அரசு அறிவிப்பின்படி, சென்னை மாதவரம் துணை கமிஷனராக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து காலியாக இருந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்கு, நேற்றிரவு திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி-யாக இருந்த விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் நாளை காலை செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி-யாக பொறுப்பேற்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் உதயமான ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை 3 எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chengalpattu district ,Vijayakumar , Chengalpattu district new SP Vijayakumar will take charge tomorrow
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!