திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் லீனா மரியா பால். சில மலையாள படங்களில் நடித்துள்ளார். பனம்பிள்ளி நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். கடந்த 2018 டிசம்பர் 15ம் தேதி பைக்கில் வந்த 2 பேர் பியூட்டி பார்லர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதுதொடர்பாக கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், மும்பை நிழல் உலக தாதாவான ரவி பூஜாரிதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக பெங்களூரு போலீசார் ரவி பூஜாரியை கைது செய்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பியூட்டி பார்லர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு அனுமதி கோரி பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் கொச்சி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து வரும் 8ம் தேதி வரை ரவி பூஜாரியை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு சென்ற போலீசார், ரவி பூஜாரியை கைது செய்து கொச்சி அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை ரவி பூஜாரி ஒப்புக்ெகாண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.