×

திருப்பூரில் பட்டா கத்தியுடன் பாடல் பாடி இன்ஸ்டாகிராமில் மிரட்டல் வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்கள் கொத்தாக கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் பட்டா கத்தியுடன் பாடல் பாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீப காலமாக சமூக வலைதள பக்கத்தில் இளைஞர்கள் பலர் சட்டவிரோத பதிவேடுகளை பகிர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். பட்டா கத்தியுடன் பயம்புறுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிவது, பட்டா கத்தியில் கேக் கட் செய்வது உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் பட்டா கத்தியுடன் பாடல் பாடி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்கள் போலீசார் கொத்தாக கைது செய்தனர். திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த பீர்முகமது மற்றும் ரகுமான் ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் கையில் கத்தி, பட்டா கத்தியுடன் பாடல் பாடி பார்வையாளர்களை மிரட்டும் தோணியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். 


இந்த வீடியோ குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார், சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர். பின்னர் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாராபுரம் கிளைசிறையில் அடைத்தனர். இதனிடையே குழந்தைகளை சரியாக கண்காணித்து வளர்க்க வேண்டும். நல்ல அறிவுரைகளை கற்று தரவேண்டும். அப்படி நல்வழிபடுத்தும்போது குழந்தைகளின் எதிர்காலம் சீராக இருக்கும் என்று பெற்றோருக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாக் கத்தியுடன் சாலையில் சுற்றித்திரிந்த 5 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Instagram , Tiruppur, Patta knife, video, youth, arrested
× RELATED படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா படுகாயம்