×

8 மாவட்டங்களை தவிர 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை: 8 மாவட்டங்களை தவிர 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரையில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை தொடரும் என கூறப்பட்டுள்ளது. ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : TN Government , Government of Tamil Nadu allows export companies to operate with 50% staff except in 8 districts
× RELATED குடிநீரில் கழிவுநீர் கலக்காமல்...