திருச்சி: சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகளின் சோதனையில் ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கியுள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த பழனி (39) என்பவர் பசை வடிவில் கடத்திய 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்வராஜ்(28) உடலில் கடத்திய ரூ.40 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.