சென்னை: செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் உற்பத்தி தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்க முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழக அரசுக்கு குத்தகைக்கு ஆலையை வழங்கினால் உடனடியாக தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.