×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,500 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு: அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற 27வது மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பேசிய ஹர்ஷவர்தன், மே மாத தொடக்கத்தில் 4 லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 3 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருப்பதாக குறிப்பிட்டார்.

கடந்த 8 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக கூறினார். அதேசமயம் 18 மாநிலங்களில் 5,000திற்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாகவும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,500 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.



Tags : Minister ,Harshawardan , corona
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...