சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி செய்துள்ளார். கொரோனா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிவேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் குருக்கள்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.