சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள காவல் துறையினரில் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.அதன்படி கொரோனா தாக்கி உயிரிழந்த 36 காவல்துறை குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க ஆணையிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.