×

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கடந்த 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் திடீரென மூச்சுதிணறல் ஏறப்பட்டு, சிகிச்சைக்காக மணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை முடிந்ததும் ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கூறப்பட்டிருந்தது.  இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து வீடுதிரும்பினார்.

Tags : Vijaykanth , Vijaykanth returned home after treatment
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...