சென்னை: மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவருக்கும் ரூ.4,000 நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருநங்கை கிரேஸ்பானு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சிறப்பு முகாம்கள் நடத்தவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.