சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் 35 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தனியார் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். மேலும், தன்னார்வலர்கள் கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் அரசு அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.