×

பிஎப் பணம் வழங்க வேண்டும்-தூய்மை பணியாளர்கள் மனு

பரமக்குடி : பரமக்குடி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்  பிஎப் பணம்வழங்க கோரி நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். பரமக்குடி நகராட்சியில் 66 நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎப் பணத்தை உடனே சம்பளத்தில் வரவு வைக்க வேண்டும், பிஎப் பணத்திற்கு வட்டி தரவேண்டும். பழுதாகிக் கிடக்கும் 15 பேட்டரி சைக்கிள் வண்டிகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த  நகராட்சி ஆணையாளர் செந்தில்குமரன் தலைமையில் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வரும் 6 மாதத்துக்குள் துப்புரவு பணியாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் நகராட்சி மேலாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, சரவணன் தினேஷ்குமார் மற்றும்  அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணியாளர் சங்க தலைவர் சந்திர போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : PF , Paramakudi: The cleaning staff working in the Paramakudi municipality have filed a petition with the Municipal Commissioner seeking payment of BP. Paramakudi
× RELATED ரூ.2 லட்சம் லஞ்சம் பி.எப். அதிகாரி கைது