×

ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்காக உழைத்தவர் மு.க.ஸ்டாலின்: ரவி பச்சமுத்து வாழ்த்து

சென்னை: ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்காக உழைத்தவர் மு.க.ஸ்டாலின் என்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
தனது சக்திக்கு மீறி உழைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் ஆட்சியில் இல்லாதபோதும், மழை வெள்ளம், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் அயராது மக்களுக்காக உழைத்ததை இந்த நாடறியும். தெய்வத்தான் ஆகாது  எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, மு.க.ஸ்டாலினின் அயராத உழைப்புக்கு வாக்களித்து, மக்கள் அவரை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

நிதிப் பற்றாக்குறை, கொரோனா பேரிடர் போன்ற கடுமையான சூழலில் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழிற்சாலைகள் போன்றவற்றை பெருகச் செய்து, சிங்காரச் சென்னையை சிங்கப்பூராக  மாற்றுவதோடு நில்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிங்கப்பூருக்கு நிகராக உயர்த்த வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

Tags : MK Stalin ,Ravi Pachamuthu , MK Stalin who worked for the people even when he was not in power: Ravi Pachamuthu Greetings
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...