×

(வேலூர்) மாணவி காதலிக்க மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலைகுடும்பத்தினருக்கு போனில் குறுஞ்செய்தி

குடியாத்தம் ஏப்.4: குடியாத்தம் அருகே கல்லூரி மாணவி காதலை ஏற்க மறுத்ததால் மன வேதனையடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வாரியார் நகரை சேர்ந்தவர் குமரவேல் என்பவர் குடியாத்தம்- காட்பாடி ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் நரேந்திரன்(23), தந்தைக்கு உதவியாக ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவி ஒருவரை நரேந்திரன் காதலித்து வந்ததாக தெரிகிறது.
ஆனால் அந்த மாணவி நரேந்திரனின் காதலை ஏற்கவில்லையாம். ஆனாலும் நரேந்திரன் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை வற்புறுத்தியும் மாணவி காதலை ஏற்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த நரேந்திரன் நேற்று அதிகாலை வீட்டில் உள்ள தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன்பாக நரேந்திரன், குடும்பத்தினருக்கு போனில் எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post (வேலூர்) மாணவி காதலிக்க மறுத்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குடும்பத்தினருக்கு போனில் குறுஞ்செய்தி
appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kudiatham ,Velur ,
× RELATED காட்பாடியில் அகற்றிய சில மாதங்களில்...