×

மகாவீர் ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்: பூங்கா நிர்வாகம் தகவல்

சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் இயங்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரியவகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை தமிழக அரசு விடுமுறையைாக அறிவித்துள்ளது. அதை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் இயங்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பூங்கா நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் கூறுகையில், ‘‘வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிப்பு பணிக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை விடுவது வழக்கம். ஆனால், இன்று (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான பார்வையாளர்கள் இங்கு வருவார்கள் என்பதால், வழக்கம்போல் இன்று பூங்கா திறந்திருக்கும். எனவே, பொதுமக்கள் பூங்காவை கண்டுகளிக்கலாம்.’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மகாவீர் ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்: பூங்கா நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Mahavir Jayanti ,Chennai ,
× RELATED மஹாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் விடுமுறை