×

காட்டுத்தீயாக பரவும் கொரோனா; இந்தியாவில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது, காட்டுத்தீ போல கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இந்த இரண்டாவது அலையானது, இளம் வயதினரை அதிகளவில் குறிவைத்து தாக்குகிறது. ஒருபக்கம் கொரோனாவை விரட்ட நாட்டில் இதுவரை 15.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவில் இதுவரை 15,49,89,635 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன. 105-வது நாளான நேற்று (ஏப்ரல் 30, 2021), நாடு முழுவதும் 27,44,485 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக (81.84%) இன்று பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags : India ,Federal Health Department , India, 15.5 crore, per person, corona vaccine
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!