- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மகாவீர்
- ஜெயந்தி
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கே.எஸ்.அழகிரி
- கட்சி
- மஹாவீர் ஜெயந்தி
![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32386233/thumb.jpg)
சென்னை: மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்று அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் மகாவீரர். அவரது போதனைகளை பின்பற்றி வாழ்வோம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மகாவீரரின் வாழ்க்கையை மனிதகுலம் முழுமையும் கடைபிடித்தால் உலகம் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் நிறைந்த, இல்லாமை என்பதே இல்லாததாகவும் மாறும். பாமக தலைவர்
அன்புமணி ராமதாஸ்: எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல் வாழ்ந்து காட்டிய மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில், அவரின் போதனைகளை பின்பற்றி வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம்.
The post மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.