சென்னை: இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த தகவல் வேதனையளிக்கிறது. ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் தடம்பதித்த அவர் இயக்குநராக மிளிர்ந்து சாதனைப் படைத்தவர். அவரது மறைவு கலைத்துறைக்குப் பேரிழப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.