×

குளித்தலை அண்ணாநகர் புறவழிச்சாலையில் கொட்டிக்கிடந்த குப்பைகள் அகற்றம்-நகராட்சி அதிரடி

குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு 24 வார்டுகளில் தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்களிடம் சேகரித்து அதனை ஓரிடத்தில் சேர்த்து லாரிகளில் கொண்டு செல்வதற்காக பல இடங்களில் கொட்டப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது இம்மாதிரி குளித்தலை நகரப்பகுதிகளில் பல இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர்.

அண்ணாா நகர் புறவழிச்சாலையில் குப்பைகளை கொட்டி விட்டுச் செல்வதால் கால்நடைகள் நடுரோட்டுக்கு கொண்டு வந்து இன்று விட்டு அப்படியே சென்று விடுகிறது அதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு சில நேரத்தில் வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையை போக்க சுகாதார ஆய்வாளர் நடவடிக்கை எடுத்து நகர்ப்புறத்தில் சேகரிக்கும் குப்பைகளை சாலை ஓரத்தில் கொட்டாமல் அதற்கென இடம்ஒதுக்கீடு செய்து அவ்விடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியால் அண்ணாநகர் புறவழிச்சாலையில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் குப்பைகளை முற்றிலும் அகற்றி தூய்மை பகுதியாக மாற்றப்பட்டது நடவடிக்கைக்கு செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நகராட்சி ஆணையர் முத்துக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் ஆகியோரை மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

Tags : Annanagar , Kulithalai: In the Kulithalai municipal area of Karur district, compostable waste is classified as non-compostable garbage and cleaners in 24 wards.
× RELATED செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு