×

முக்கிய நகரங்களில் ரெம்டெசிவிர் அரசுக்கு மருத்துவ சங்கம் கோரிக்கை

சென்னை: மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக மருத்துவ சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் (தமிழக கிளை) தலைவர் பி.ராமகிருஷ்ணன், ஏ.கே.ரவிக்குமார் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க சென்னையில் மருந்தகம் தொடங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோல், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், ஓசூர், நாகர்கோவில், வேலூர், திண்டுக்கல் போன்ற முக்கிய நகரங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Tags : Medical Association ,Remtecivir , Medical Association Request for Remtecivir Government in Major Cities
× RELATED பதஞ்சலி நிறுவன விவகாரம்;...