×

கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து 3 முக்கிய ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார் பிரதமர் மோடி : மீண்டும் முழு லாக்டவுன்?

டெல்லி  : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி உள்பட சில மாநிலங்களை சேர்ந்த முதல்வர் பங்கேற்கினறனர்.அப்போது, தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்துவது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதைத் தொடர்ந்து, நண்பகல் 12.30 மணிக்கு ஆக்சிஜன் உற்பத்தி நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். முன்னதாக காலை 9 மணிக்கு கொரோனா அதிகரிப்பால் பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். மேலும், கொரோனா தடுப்பு குறித்து உயர்மட்ட குழுவுடன் பேசவுள்ளதால், தேர்தல் பிரசாரத்துக்காக மேற்குவங்கத்தில் இன்று மேற்கொள்ள இருந்த பயணத்தை ரத்து செய்வதாக பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : Modi , பிரதமர் நரேந்திர மோடி
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...