×

மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த பக்கவிளைவும் ஏற்பட்டதாக தகவல் வரவில்லை. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் கூறினார்.


Tags : Health Secretary ,Radhakrishnan , All people should be vaccinated against corona: Interview with Health Secretary Radhakrishnan
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்