×

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 10 பேர் பரிதாப பலி? மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை:மகாராஷ்டிராவில் நாலா சோபாராவில் உள்ள விநாயகா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு இயங்கி வருகின்றது. இங்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திடீரென ஒரே நாளில் 7 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தான் கொரோனா நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால், ‘வயது முதிர்வு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக நோயாளிகள் இறந்திருக்கலாம். மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை கிடையாது,’ என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.  இதேபோல் வாசாய் தாலுக்காவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே 3 பேர் பலியாகி  இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Maharashtra , 10 corona patients die due to lack of oxygen? Excitement in Maharashtra
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...