சென்னை : முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது
எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
முக கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக் கொள்வது அதை விட முக்கியம்.
தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள், எனத் தெரிவித்துள்ளார்.