×

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே பல வேட்பாளர்களுக்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக செல்வப்பெருந்தகை அறிவிக்கப்பட்டார். தொகுதி முழுவதும் பொதுமக்களை நேரில் சந்தித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று காலை அதற்கான முடிவு வந்தது. அதில் செல்வப்பெருந்தகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதையடுத்து, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதுதொடர்பாகச் செல்வப்பெருந்தகை தன்னுடைய பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது, ‘‘எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும், என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள், கட்சியினர், உறவினர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் ’’என்று தெரிவித்துள்ளார்.

Tags : Sriperumbudur Congress , Corona infection confirmed for Sriperumbudur Congress candidate's fortune
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி...