×

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலத்தில் 475 தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

கொல்கத்தா: தமிழகம் உட்பட 5 மாநிலத்தில் நாளை 475 சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மேற்குவங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 60 தொகுதிகளுக்குத் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 31 தொகுதிகளுக்கு இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாமில் 86 தொகுதிகளுக்கு முதல் 2 கட்டங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று மீதமுள்ள 40 தொகுதிகளுக்கு நடைபெற்றது. கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல் புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர்.


Tags : Tamil Nadu ,Kerala ,Vavadachcheri ,Assam ,West , Polling has been completed in 475 constituencies in 5 states namely Tamil Nadu, Kerala, Pondicherry, Assam and West Bengal
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...