×

மத்திய அமைச்சர் அமித்ஷா, யோகி ஆதித்யநாத்தை தற்கொலை தாக்குதல் நடத்தி கொலை செய்வோம் : சிஆர்பிஎஃப்பிற்கு மிரட்டல் கடிதம்..!

லக்னோ உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கொலை திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு (சிஆர்பிஎஃப்) மின்னஞ்சல் வந்துள்ளது.சில நாட்களுக்கு முன்பு சிஆர்பிஎஃப் மும்பை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் இன்று காலை வெளிப்பட்டது. அதில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கியமான கட்டிடங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அச்சுறுத்தப்பட்டுள்ளது.
 
தற்கொலைத் தாக்குதல் மூலம் யோகி ஆதித்யநாத் மற்றும் அமித் ஷா ஆகியோரை கொலை செய்ய உள்ளோம் என்றும் இதற்காக  11 தற்கொலை குண்டுவீச்சாளர்களாக தயார் செய்துள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்கு மின்னஞ்சல் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளுக்கு அனுப்பப்பட்டு, இரண்டு வி.வி.ஐ.பி தலைவர்களின் பாதுகாப்பு விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நக்சல்களுக்கு எதிரான போராட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.



Tags : Union Minister ,Amit Shah ,Yogi Adityanath ,CRPF , Amitsha, Yogi Adityanath
× RELATED புதுக்கோட்டையில் மழை காரணமாக ஒன்றிய...