×

பொன்னை அருகே மூடியே கிடக்கும் மகளிர், குழந்தைகள் சுகாதார வளாக கட்டிடம்-பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

பொன்னை : பொன்னை அருகே மூடியே கிடக்கும் மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னை அடுத்த கே.என்.பாளையம் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைந்த மகளிர், குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாடின்றி மூடியே கிடக்கிறது. இதனால், இப்பகுதியில் மகளிர், குழந்தைகள் வளாகத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் தற்போது  சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், கட்டிடம் மூடி வைக்கப்பட்டுள்ளதால் போதிய பராமரிப்பின்றி செடிகள் முளைத்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால், விஷப்பூச்சிகள் நடமாட்டம் இங்கு அதிகரித்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூடியே கிடக்கும் ஊரக வளர்ச்சி மகளிர், குழந்தைகள் சுகாதார வளாக கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கட்டிடத்தின் வளாகத்தில் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Ponna , Ponnai: Women and children lying closed near Ponnai should open a health complex and bring it into use
× RELATED ஆந்திராவிலிருந்து டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது