×

தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு கொலை மிரட்டல்.. கார் மீது அதிமுகவினர் தாக்குதல்!!

கோவை, :கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்தனர், கார் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறை வேடிக்கை பார்ப்பதாக திமுக வேட்பாளர் குற்றம்சாட்டினார்.கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவனேசாபதி, அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகிேயாருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு நாளான இன்று திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, தனது காரில் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்குப்பதிவு எப்படி நடக்கிறது? என ஆய்வுசெய்து வருகிறார். அப்போது கோவை செல்வபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல முயன்றார். ஆனால், அங்கு திரண்டிருந்த அதிமுக மற்றும் பாஜவை சேர்ந்தவர்கள், அவரை உள்ளே விட அனுமதி மறுத்தனர். இதற்கு அவர், நான் முறைப்படி பாஸ் வாங்கியுள்ளேன். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் செல்ல வேட்பாளர்களுக்கு அனுமதி உண்டு, நீங்கள் எப்படி தடுக்கிறீர்கள்? என கேள்வி கேட்டார்.

உடனே அங்கு திரண்டிருந்த அதிமுக மற்றும் பா.ஜ.வினர், இது பதட்டமான தொகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, எந்த கட்சியினரும் உள்ளே செல்ல அனுமதி இல்லை எனக்கூறினர். இதனால், திமுக-அதிமுக தொண்டர்களுக்கு இடையே தகராறு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சமயத்தில் வேட்பாளர் என்கிற முறையில் கார்த்திேகய சிவசேனாபதி, பூத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். சுமார் 15 நிமிடம் கழித்து மீண்டும் வெளியே வந்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த அதிமுக, பாஜ தொண்டர்கள், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போது, அதிமுக தொண்டர் ஒருவர் போலீஸ்காரரின் லத்தியை பிடுங்கி, கார்த்திேகய சிவசேனாபதி காரில் பலமாக தாக்கினார். அதிர்ஷ்டவசமாக கார் கண்ணாடி எதுவும் உடையவில்லை.

இதைத் தொடர்ந்து தனக்கு, அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும்  தனது காரை, கட்டையால் அடித்து சேதப்படுத்தினர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வேட்பாளர் சிவசேனாபதி, கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் புகார் மனு அளித்தார்.

Tags : Thondamuthur ,DMK ,AIADMK , கொலை
× RELATED பொள்ளாச்சி தொகுதி பொது மக்கள்...