×

ரவுடி கொலையில் 3 பேர் கைது

பெரம்பூர்: ஓட்டேரி எஸ்.எஸ்.ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மதன் (30), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி விஜி என்ற மனைவியும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். மதன் மீது தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு மற்றும் டிபி சத்திரம், அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓட்டேரி பாஷ்யம் 3வது தெருவில் ஆட்டோவை நிறுத்திவிட்டு மதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 5 பேர், திடீரென அரிவாளால் மதனை சரமாரியாக வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே மதன் துடிதுடித்து உயிரிழந்தார். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டேரியை பகுதியை சேர்ந்த சூர்யா (22), சக்திவேல் (20) கார்த்திக் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் மதனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சத்யாவுக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மதன் தொடர்ந்து சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கஞ்சா கேட்டு தொல்லை செய்ததால் அவரை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள சத்யா, ஜீவா, பூபதி, சுரேஷ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Rowdy , 3 arrested in Rowdy murder
× RELATED 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை...