×

தொகுதி பக்கமே வராமல் தற்போது ஓட்டு கேட்க மட்டும் ஏன் வருகிறீர்கள்!: வாக்கு கேட்க சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவை முற்றுகையிட்ட பெண்கள்..!!

தூத்துக்குடி: கோவில்பட்டியில் வாக்கு கேட்க சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல் வாக்கு கேட்க வந்ததாக கூறி முற்றுகையிட்டனர். தேர்தல் முடிந்த பின் விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என கூறிவிட்டு கடம்பூர் ராஜூ சென்றார். தொகுதி பக்கமே வராமல் தற்போது ஓட்டு கேட்க மட்டும் ஏன் வருகிறீர்கள் என்று பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.


Tags : Minister ,Kampur Raju , Constituency, vote, vote, Minister Kadampur Raju, women, siege
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...