சென்னை: சென்னை திருவல்லிக்கேணி சுயேட்சை வேட்பாளர் கிருஷ்ணதாஸிடம் பரப்புரைக்கு அனுமதி தர லஞ்சம் கேட்ட காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவலர் குணசேகரநை பணி இடை நீக்கம் செய்து சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். சுயேட்சை வேட்பாளரிடம் லஞ்சம் கேட்டதால் காவலர் குணசேகரன் நேற்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.