×

துபாயில் இருந்து கடத்தி வந்த 800 கிராம் தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள லாட்ஜில் நேற்று முன்தினம் இரவு போலீசார் சோதனை நடத்தியபோது, துபாயில் இருந்து வந்த நாமக்கல் மாவட்டம் பாசிப்பட்டினத்தை சேர்ந்த குல்குர்னிபாஷா (35), மர்சூத்அலி (38), சேக் அப்துல்லா (27), சைதாப்பேட்டை சாரதி நகரை சேர்ந்த புர்க்கானுதீன் (41), அப்துல் ஹக் (38) ஆகியோர் தங்கி இருந்ததும், அவர்களிடம் 800 கிராம் தங்கம், 10 ஐபோன்கள், 65 வெளிநாட்டு மதுபானங்கள், 34 வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் இருப்பது தெரிந்தது.

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய ஆவணங்களும் இல்லை. இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசார்   பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் உள்ளிட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்தாக திருவல்லிக்கேணி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.



Tags : Dubai , Kidnapped from Dubai 800 grams of gold seized: 5 arrested
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...