×

தெலங்கானா மாநில மாந்தோப்பில் மாங்காய் பறித்த சிறுவர்கள் வாயில் சாணத்தை திணித்த காவலாளிகள்: சமூக வலைதளத்தில் கொடூர வீடியோ

திருமலை: தெலங்கானா மாநிலம், மகாபூபாபாத் மாவட்டம், பொட்லதாண்டாவில் உள்ள தனியார் மாந்தோப்பில் பனொட்டு யாகூப், பனொட்டு ராமு ஆகியோர் காவலாளிகளாக இருந்து வருகின்றனர். டோரூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள்  ஹர்சித் (13), சோகைல் (16) ஆகியோர், அம்மாபுரத்தில் உள்ள தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது, வரும் வழியில் மாந்தோப்பில் நுழைந்து, மாங்காய்களை பறித்து சாப்பிட்டனர். இதை கண்ட காவலாளிகளான யாகூப்பும், ராமுவும் சிறுவர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இருவரின் கைகளையும் கட்டி வைத்து, வாயில் மாட்டு சாணத்தை திணித்து சாப்பிடும்படி மிரட்டினர். இதை அவ்வழியாக சாலையில் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும், சமூக வலைத்தளத்தில் அதனை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து தகவலறிந்த டோரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  சி.எச்.நாகேஷ், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.



Tags : Manthop, Telangana , In Manthop, Telangana In the mouth of the boys who plucked the mango Guards who dumped dung: A brutal video on a social networking site
× RELATED கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர்...