×

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் வீடு வீடாக சென்று அதிமுகவினர் பணப்பட்டுவாடா

பெருங்குடி: சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் வீடு வீடாக சென்று அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யும் காட்சிகளுடன் தேர்தல் பறக்கும் படையிடம் திமுக புகார் அளித்துள்ளது. அதிமுக வேட்பாளர் கந்தன் சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் பணம், துண்டு பிரசுரம் வழங்கியவர்கள் சிக்கினர். பணப்பட்டுவாடாவை தடுத்த திமுகவினரை அதிமுகவினர் தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே ஆர்.கே நகர் தொகுதி, ஆலந்தூர் தொகுதிகளில் அதிமுகவினர் வாக்குகளுக்கு பணம் விநியோகம் செய்வதாக திமுக தரப்பில் இருந்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளிடம் திமுக தரப்பினர் புகார் புகார் அளித்துள்ளனர். தற்போது அதன் தொடர்ச்சியாக தான் சோழிங்கநல்லூர் தொகுதியில் இருக்கக்கூடிய பெருங்குடி கல்லுக்குட்டை குடியிருப்பு பகுதியில் அதிமுகவை சேர்ந்த நபர் ஒருவர் வீடு வீடாக சென்று வாக்குகளுக்கு பணம் விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பணமும், துண்டு சீட்டும் விநியோகித்த போது அந்த பகுதியில் இருக்கக்கூடிய திமுகவினர் அவரை மடக்கி பிடித்ததாகவும் அப்போது அங்கு வந்த மற்ற அதிமுகவினர் திமுகவினர் மீது தாக்குதலில் ஈடுபட முயன்றதாகவும் புகார்கள் எழுந்திருக்கிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சோளிங்கநல்லூர் தொகுதியை பொறுத்தவரை திமுக தரப்பில் அரவிந்த் ரமேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.கந்தன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தான் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Tags : Cholinganallur ,Chennai , AIADMK
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...