×

மக்களின் கோரிக்கைகளை தொய்வில்லாமல் செய்து கொடுப்பேன்: அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் உறுதி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு தொகுதி வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் மக்கள் கொடுத்த கோரிக்கைகளை எந்த ஒரு தொய்வில்லாமல் உடனுக்குடன் செய்து கொடுப்பேன் என உறுதியளித்தார். சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் காட்டாங்கொளத்தூர் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா (எ) கஜேந்திரன் போட்டியிடுகிறார். இதில், செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளும், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் ஆகிய நகராட்சிகளும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியும் உள்ளன. இதில், அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் அனைத்து பகுதிகளுக்கும் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு அளிக்கும்படி தினமும் காலை முதல் இரவு வரை அதிமுக, பாமக, பாஜக, புரட்சிபாரதம் உள்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு பெண்கள், பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்து, சால்வை மற்றும் மலர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது சொந்த ஊரான வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினமங்கலம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அமமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள்  உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் முன்னிலையில் இணைந்து வருகின்றனர். இதில், அனைவருக்கும் அவர் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது, அவர் பேசுகையில், ‘சட்டமன்ற தேர்தலில், செங்கல்பட்டு தொகுதியில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தால்,

மாற்று கட்சியினர் மற்றும் மக்கள் கொடுத்த கோரிக்கைகளை எந்த ஒரு தொய்வில்லாமல் உடனுக்குடன் செய்து கொடுப்பேன். மேலும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி. இதில், அதிமுக அரசு சொன்னதை செய்யும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஒருபோதும் ஏமாற்றாது. அதற்காகத்தான் அதிமுக அரசின் மீது நம்பிக்கை வைத்து பல்வேறு மாற்று கட்சியிலிருந்து விலகி தினமும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதுவே, அதிமுக ஆட்சி மீண்டும் அமைவதற்கான சான்று’ என்றார்.

Tags : AIADMK ,Gajendran , I will fulfill the demands of the people without hesitation: AIADMK candidate Gajendran assured
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...