×

அனகாபுத்தூர் பகுதியில் சைக்கிளில் சென்று சிட்லபாக்கம் ராஜேந்திரன் பிரசாரம்

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம், பொதுமக்கள் அவருக்கு மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி அனகாபுத்தூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர் வீதி வீதியாக சைக்கிள் ஓட்டி சென்றபடி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுமக்களிடையே அவர் பேசுகையில், ‘‘எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழகத்திற்கு செய்துள்ளது.

மேலும் பல வளர்ச்சி திட்ட பணிகளை அதிமுக அரசு மீண்டும் கொண்டுவந்து மக்கள் பயன்பெற இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமைய, பொது மக்கள் உதவ வேண்டும்,’ என்றார்.  அப்போது பொதுமக்கள், ‘‘நிச்சயம் எங்கள் ஓட்டு உங்களுக்கே, மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் அமையும்’ என அவரிடம் உறுதி அளித்து வாழ்த்தி அனுப்பினர். பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : Rajendran ,Chittagong ,Anakaputhur , Rajendran campaign in Chittagong by cycling in Anakaputhur area
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி