×

தாராபுரம் அருகே சூரியநல்லூரில் முதல்வர் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணியின் வாகனங்கள் விபத்தில் சிக்கின..!!

தருமபுரி: தாராபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்யவிருக்கக்கூடிய நிலையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற போது அமைச்சர் வேலுமணி மற்றும் சபாநாயகர் ஆகியோர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. தாராபுரம் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டமானது தாராபுரத்தில் நடைபெறவிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து முதலமைச்சரின் காண்மாய் வரும் போது 3 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. முதலமைச்சரின் வாகனத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பயணம் செய்திருக்கிறார்கள். இதனால் எஸ்.பி. வேலுமணியின் கார் காண்மாயின் இறுதியாக வந்திருக்கின்றது. அதேபோன்று சபாநாயகர் தனபாலன் கார் இந்த காண்மாயில் வந்திருக்கின்றது. தாராபுரம் அருகே சூரியநல்லூர் என்ற இடத்தில் வரும் போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. முன்னாள் வந்த பாதுகாப்பு வாகனத்தினுடைய டயர் திடீரென வெடித்ததன் காரணமாக சாலையின் நடுவே உள்ள தடுப்பில் வாகனம் மோதியது.

தொடர்ந்து அடுத்தடுத்து வந்த 3 வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 3 கார்களும் சேதம் அடைந்துள்ளது. மேலும் 2 ஓட்டுனர்களுக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த பகுதியில் உள்ள வாகனத்தை அப்புறப்படுத்திவிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி ஆகியோர் வேறு வாகனத்தில் வந்ததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


Tags : Speaker ,Dhanapal ,Minister ,Velamuni ,Chief Minister ,Sunnalur ,Tarapura , Tarapuram, Chief Minister's vehicle, Speaker Danapal, Minister Velumani, vehicle, accident
× RELATED அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி...