சென்னை: சென்னை வால்டாக்ஸ் சாலை தங்க நகை பட்டறையில் பணிபுரியும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தங்க நகை பட்டறையில் பணிபுரியும் 54 மேற்குவங்க மாநில தொழிலாளர்களில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.