சென்னை: தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமானது தான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மிகவும் பிறப்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த சிலசமூகத்தினர் எதிர்ப்பதாக கூறப்படும் நிலையில் ஓபிஎஸ் இதனை தெரிவித்துள்ளார். மேலும் குழு தரும் அறிக்கை அடிப்படையில் வன்னியர் இடஒதுக்கீடு கூடுவதற்கும், குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.