சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். சேலம் வடக்கு, மேற்கு, தெற்கு, ஆத்தூர், கெங்கவல்லி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பாஜகவிடம் அடிபணிந்தது அதிமுக என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் பேசி வருகிறார்.