×

அதிராம்பட்டினத்தில் வடிகால்களை சுத்தம் செய்த பணியாளர்களுக்கு பாராட்டு

அதிராம்பட்டினம்: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிருமிநாசினி தெளிப்பது மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் தினந்தோறும் செய்து வருகிறார். இந்நிலையில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபூபக்கர் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுத்தெரு பகுதியில் நீண்ட வருடங்களாக வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடந்தது.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் உதவி இயக்குனரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் பேரில் துப்புரவு பணியாளர்களை கொண்டு பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, புதுத்தெரு, மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக சாக்கடைகளை அகற்றும் பணியில் பேரூராட்சி துப்பரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்கள் பணியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி ஆய்வாளர் செந்தில் குமரகுரு மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Adirampattinam , In Adirampattinam, drains, cleaning, staff
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...