கொடைக்கானல் : கொடைக்கானலில் நிலப்பிரச்னை காரணமாக கிறிஸ்தவ தேவாலய கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைராஜ்(50). இவருக்கு அப்பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலப் பிரச்னை தொடர்பாக அரசிடம் பல்வேறு முறை கோரிக்கை வைத்துள்ளார். அந்த பிரச்சனையை அரசு அலுவலர்கள் தீர்க்காத காரணத்தினால் நேற்று மாலை அருளானந்தர் தேவாலய கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தற்கொலைக்கு முயன்ற குழந்தைராஜை மீட்டனர். இதுபற்றி கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு முயன்ற குழந்தை ராஜா கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.