×

நீங்கள் தான் மீண்டும் எம்எல்ஏ : மா.சுப்பிரமணியக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சாரதி நகரில் தொடங்கி, முனுசாமி தெரு, புண்ணியகோட்டி தெரு, அம்மா கண்ணம்மா தெரு, மணி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வி.எஸ்.முதலி தோட்டத்தெரு, பாரதி பிளாக், கோபால் தெரு, சீதாதெரு, ஆறுமுகம் தெரு, காமராஜ் காலனி, ஆறுமுகம் தெரு, லட்சுமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பகுதியை சேர்ந்த பொதுமக்கள், “நாங்கள் கேட்டதையெல்லாம் செய்து கொடுத்துள்ளீர்கள். நீங்கள் தான் மீண்டும் எம்எல்ஏவாக வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு” என்று கூறி இரண்டு புறாக்களை அவரிடம் கொடுத்தனர். அதை வாங்கிய மா.சு, “அந்த புறாக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

அதிமுக அரசைபோல் அடைபட்டு கிடக்கக் கூடாது” என்று கூறி அதை வானில் பறக்கவிட்டார். அப்போது பொதுமக்கள், “புறாக்கள் எப்படி பறந்து போனதே அதேபோல் அதிமுக ஆட்சியும் இத்துடன் பறந்துபோவது உறுதி” என்று கூறினர்.
இந்த வாக்குச்சேகரிப்பில் திமுக சைதை மேற்கு பகுதிச்செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதரன், மதிமுக ப.சுப்பிரமணி, காங்கிரஸ் முத்தமிழன், கோகுல், செல்வக்குமார் விசிக பாண்டுரங்கன், கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேசன், திமுக வட்ட செயலாளர் சை.மு.சேகர் உள்ளிட்ட கூட்டணி கட்சி ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : MLA ,Ma Subramaniam , You are the MLA again: People enthusiastically welcome Ma Subramaniam
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...