சென்னை: தமிழக அரசு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரியை இறக்க கூலி வழங்கியதில் ரூ.1,026 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார். நிலக்கரியை இறக்க ஒப்பந்ததாரர் அமர்த்திய தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு தலா ரூ.236.50 வழங்கியுள்ளனர். எந்தவித ஆவணத்தையும் ஒப்பந்ததாரரிடம் இருந்து பெறாமல் ரூ.1,264.49 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.