×

மக்கள் குரலாக பேரவையில் ஒலிப்பேன்: அசன் மவுலானா பிரசாரம்

சென்னை: வேளச்சேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா நேற்று பெசன்ட் நகர், திருவான்மியூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, தொகுதிக்கு என்னென்ன செய்வேன்  என்பதை துண்டு பிரசுரமாக மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, வேளச்சேரி காந்தி ரோட்டில் உள்ள அட்வென்ட் கிறிஸ்டியன் கதீட்ரல் ஆலயத்தில் போதகர் மற்றும் ஆலயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்றார். சபை மக்களும், வெற்றி உங்களுக்கு தான்  என வாழ்த்தினர். பின்னர், ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘வெற்றிக்கு பின்பு ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பகுதி அலுவலகம் அமைக்கப்படும். அதில், 24 மணி நேரமும் வேலை செய்யக்கூடிய ஆட்கள் இருப்பார்கள்.

உங்கள் குறைகளை கூறுங்கள். அதை தீர்க்க எங்கு பேச வேண்டுமோ, அங்கு நான் பேச தயாராக இருககிறேன். சட்டசபையில் உங்கள் குரலாக இருப்பேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் தொண்டனாக இருப்பேன்’’ என்றார். திமுக பகுதி செயலாளர் சேகர் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் அவருடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Assange Maulana , I will be the voice of the people in the assembly: the Assange Maulana campaign
× RELATED மக்கள் குரலாக பேரவையில் ஒலிப்பேன்: அசன் மவுலானா பிரசாரம்