×

வேகமாக பரவும் கொரோனா: அமமுகவினர் சால்வை, பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும்: டிடிவி.தினகரன் கோரிக்கை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதம் வரை ஓரளவு கட்டுக்குள் இருந்த கொரோனா நோய், கடந்த சில வாரங்களாக அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.

மக்களிடம் பிரசாரம் செய்யச் செல்லும்போது போதிய சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். மிக முக்கியமாக, நான் பிரசார களத்திற்கு வரும்போது எனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


Tags : DTV.Dhinakaran , TTV.Dhinakaran
× RELATED எனது பிறந்தநாளில் ஆடம்பர கொண்டாட்டம்...