மைசூரு: வரும் 2023ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் குமாரசாமி மீண்டும் முதல்வர் ஆவார் என்று முன்னாள் அமைச்சர் எல்.ஆர். சிவராமகவுடா தெரிவித்தார். மைசூருவில் நேற்று செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் எல்.ஆர்.சிவராமகவுடா கூறுகையில், நாகமங்கலாவில் இந்த முறை நானே வெற்றி பெறுவேன். எம்.எல்.ஏ சுரேஷ்கவுடாவுக்கு நிரந்தரமாக நாகமங்கலாவை எழுதி கொடுக்கவில்லை. மஜதவில் எனக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சுரேஷ்கவுடாவை எம்எல்சியாகவோ, எம்.பியாகவோ அனுப்ப விருப்பமில்லை. கடந்த 2018ல் குமாரசாமி முதல்வராக முடியாது என்று கூறி சிரித்தார்கள். ஆனால் அந்த தேர்தலில் குமாரசாமியை தேடி வரும் சூழல் உருவானது. அதேபோல் வரும் 2023ல் மறுபடியும் குமாரசாமி முதல்வர் ஆவார். அப்போது அவரின் காலை பிடிக்கும் சூழ்நிலை ஏற்படும்’’. இவ்வாறு முன்னாள் அமைச்சர் எல்.ஆர். சுரேஷ்கவுடா தெரிவித்தார்.